சிகரம் -k b
திரை உலகின் சிகரம் ஒன்றின்
திரை மறைந்து போனது
கலை உலகின் தலைமகனின்
தலை சரிந்து போனது
சினிமா என்ற பேனா கொண்டு
புது சகாப்த்தம் எழுதிய
சரித்திர கலைஞன் நீர்
அதனாலோ கண்களில் நீர்
நீர்க்குமிழி என்பது நிலையற்றது
அதுவே நீர் வளர நிலம் தந்தது
இந்திய திரை உலகில்
புதுமை ,பெருமை என்றால்
ஒரு படைப்பாளியாய்
களைப்பு அறியாத
உழைப்பாளியாய் உங்கள்
படைப்புகள் வியக்கவைக்கும்
நீங்கள் திரையில் செதுக்கிய
சிப்பங்கள் யாவும் நட்சத்திரங்களாய்
ஒளிவீசும் உம் பெருமை சொல்லி