அந்தபுர அழகன்கள்

என் அரண்மனை அரசி நீ
என்று மாலையிட்டு
மணி சூடி,மணம் முடித்தேன்
உன்னை நான்..

மனைவியாய் நீ வந்து
போராட்டம் செய்கிறாய்
என் மனதில் நீ
அந்தபுர அழகிகள் வேண்டாம் என்று.

அந்தபுர அழகன் தான்
வேண்டும் என்று
என் அரசாட்சியை மாற்றி
ஆட்சி புரிகிறாய் நீ இன்று.

அன்பை அடிமையாக்கி
பெண்மையை போற்றிடவே
அந்தபுர அழகிகளை விரட்டி விட்டு
அந்தபுர அழகன்களை தந்து விட்டேன் பரிசாய்.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (5-Jan-15, 3:57 pm)
பார்வை : 84

மேலே