நினைத்தது ஒன்று

அரங்கம் நிறை
கைத்தட்டல்கள் பெறும்
பாடகனாக ஆசைப் பட்டவன்
பெரியதொரு குழுவினரில்
பின்னணியில் ராகம் இழுக்க
நேரிட்டது போல..
..
தள்ளு முள்ளு ..
கூட்டத்தினிடை ..
தாரகையாய் வலம் வரும்
திரைப்பட நாயகியாகிட விரும்பியவள்..
காதல் ஜோடிக்குப் பின்னே
கூட்டமாக இறங்கும் தேவதைகளில் ஒருத்தியாக..
முகம் தெரியாமல் போவது போல..
..
இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரனாய் .
உலகக் கோப்பை ஏந்தி ஆடுகளம் சுற்றி வர
ஆட்டோகிராப் போடும் இளம் நாயகனாய்
வர ஆசைப்பட்டவன்..
சதிகளினால் வாய்ப்பிழந்து அலுவலக .
ஊழியனாய்..ஆனது போல..
..
கவிஞன் என்று நீ எனைக் கொண்டாடி
மகிழ்ந்து காதலை தெரிவிப்பாய்
என எண்ணியவன்..
இந்த கவிதை தொகுப்பை..
கடையில் போட்டிடலாமே..
என்று சொன்ன போது..
கலங்கவே இல்லை..
நான்..
குப்பையில் போடு என்று
நீ சொல்லாத வரை..
சந்தோஷமே..!
என காதலி யதார்த்தமானவள்..
என்று சொல்லிக் கொண்டேன்..
மனதுக்குள்ளே!
..
எப்படி..நீ..
கோபத்தில் கூட அழகாக இருக்கிறாய்?
..
(போகாதே..போகாதே..இது கவிதை அல்ல..!)

எழுதியவர் : கருணா (13-Jan-15, 11:41 am)
Tanglish : ninaiththathu ondru
பார்வை : 121

மேலே