இரும்பாய் போன இதயம்

இனிமையாய் சொன்னாய் நீ
இணைந்தே இருப்பேன் என்று
இன்று சொல்கிறாய் நீ
இனிமேல் வராதே என்று..

இனிக்கவே பேசி
இணைப்பை துண்டித்த உன்
இதயம் என்ன
இரும்பால் படைக்க பட்டதா?..

இறைவனை கேட்கிறேன்
இவள் இதயத்தை
இப்படியாய் படைத்தாய் நீ
இப்போதே சொல்லி விடு.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (20-Jan-15, 10:32 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 67

மேலே