மனித இனம்

அகிலமெல்லாம் போற்றிட ..
அறிவுச் சுடர் ஏந்தி..
ஆளப் பிறந்தவன் நீ !
ஆயிரமாயிரம் சாதனைகள் புரிய
ஆண்டவன் படைத்திட்ட
அரிய பொக்கிஷம் நீ !
இன்னல் பல நேரிடினும்
இமயம் தொட பிறந்தவன் நீ !
ஈகை குணம் கொண்டு
ஈன்றோர் பெயர் சிறக்க வந்தவன் நீ !
உன் நிலை உயர்த்தி
உலகம் வழ வந்த இனம் நீ !
என்நிலையையும் சாதகமாக்கி
ஏற்றம் பெற வந்தவன் நீ !
ஐயம் தெளிந்து ஞான
ஒளிவிட வந்த இனம் நீ !
ஒற்றுமையுடன் செயலாற்றி
ஓங்குபுகழ் பெற வந்தவன் நீ !

எழுதியவர் : இன்பா (27-Jan-15, 8:57 pm)
சேர்த்தது : INBASRI
Tanglish : manitha inam
பார்வை : 157

மேலே