கடுகு சிறுத்தாலும்

காதல் மூளை முதிராத
என் இளமைக் காலங்களில்
உனக்கு கடிதம் எழுதினால்
என்ன புத்தகம் எழுகிறாயா
என்று கிண்டலடிப்பார்கள்....
கிண்டல்களை குறைப்பதற்காக
குறைத்துக்கொண்டேன் பக்கங்களை..
அதை என்ன கட்டுரையா
என்று கலாய்த்தார்கள்...
குறையாத காதலை வைத்துக்கொண்டு
குறைக்கவேண்டியதாயிற்று
உனக்கும் எனக்குமான காதலை
ஒரு இன்லேண்ட் கடிதத்திற்குள்...!
தற்போது அதற்கும் வழியில்லாமல்
அறைகுறை ஆங்கிலத்தில்
குறுஞ்செய்தியாக நம் காதலை
கைபேசியில் படிக்கவைத்துவிட்டது காலம்...
காதலுக்குள் நெருக்கம் நேர்கையில்
இருவருக்குள் பாறிமாறிக்கொள்ளும்
காதல் வார்த்தைகளுக்கும்
சுருக்கம் வந்துவிடும்போல...
என் அன்பே...
வார்த்தைக் குறைப்பால்
நம் காதல் குறைந்துவிட்டது
என்று எண்ணிவிடாதே.....
கடுகு சிறுத்தாலும்
கொஞ்சமும் குறையாது காரம்...
சுண்ட காய்ச்சியப்பால்
எப்போதும் சுகம்தானே...!

எழுதியவர் : ஜனனி ராஜாராம் (2-Feb-15, 9:42 pm)
பார்வை : 124

மேலே