பாவியாகிவிட்டேன் நானடி ……

முத்தங்கள் கொடுத்தோம்
பார்க்கும் பொழுதெல்லாம்
காமத்திற்கு இரையாகினோம்
பரவசமாகும் பொழுது
புருஷன் என்றழைத்தாய்
தாலிக் கட்டாதப் பொழுதும்
உன் நம்பிக்கையை சமாதியாக்கியப் போதும்
என்னை ஏனடி நேசித்தாய்

காயங்கள் பல வாங்கினாய்
காத்திருந்தாய் பல மாதமாய்
பெற்றோரின் அன்பை வெறுத்தாய்
பெற்றெடுத்த தாயைப் போல் பாவித்தாய்
அளவின்றி பாசம் வைத்தாய்
அன்போடு தினமும் கட்டியனைத்தாய்
துரியோதனன் போல் துரோகம் செய்தேனே இருந்தும்
என்னை ஏனடி நேசித்தாய்

பல புத்திமதி கேட்டாய்
பக்குவமாக வழி நடத்தினாய்
கண்ணீரில் கரைந்தாய்
கனவிலும் என்னோடு வாழ்ந்தாய்
தவமிருந்து கிடைத்ததுப் போல் எண்ணினாய்
தாலாட்டும் பாடினாய்
கனச்சொற்களால் கொன்றேனே இருந்தும்
என்னை ஏனடி நேசித்தாய்

தவறு செய்துவிட்டேன் என்றென்னவில்லை - உன்னை
தண்டித்துவிட்டேன் என்று தினமும் வருந்துகிறேன்
தடுமாறிவிட்டேன் என்றென்னவில்லை - உன்னை
தத்தழிக்கவிட்டேன் என்று தினமும் வருந்துகிறேன்
தத்தெடுத்தத்தாயைத் தொலைத்துவிட்டேன் என்றென்னவில்லை - உன்னை
தெரியாத ஒருவனிடம் கொடுத்துவிட்டேன் என்று தினமும் வருந்துகிறேன்
தன் காதலை இழந்தேன்விட்டேன் என்றென்னவில்லை - உன்னை
தவறவிட்டுவிட்டேன் என்று தினமும் வருந்துகிறேன்
பாவியாகிவிட்டேன் நானடி ……..!

எழுதியவர் : ராஜா (7-Feb-15, 2:31 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 264

மேலே