காலங்கடந்து போயிடுச்சு

காலங்கடந்து
போயிடுச்சு...
வானமது
மறந்துடுச்சு.....
ஏரோட்டி நாத்துநாட்டு
ஏமாந்து போனேன் ....
அஞ்சுக்கும் பத்துக்கும்
தினம் அல்லாடிநிக்குறேன்.......
ஏன் இந்தப்பொழப்புன்னு தினம்
எண்ணியெண்ணி நோகுறேன்.....
மனசுவிட்டு போயிடுச்சு
மத்ததெல்லாம் வீடாச்சு .......
பட்டக்கடன் தீரலையே-பசி
பட்டினி மாறலையே ......
போதுமிந்த நிலைமையினு
பொண்டாட்டி தாலியவச்சு
எம்புள்ளைய படிக்கவச்சேன்
ஊர்ச்சொல்லுக்கு ஆளானேன் .....
பஞ்சத்த மனசுலவச்சு
பாவிப்புள்ள படிச்சான் ......
பாவி - நான்வாங்குன சாபத்தால
எம்புள்ள அலையறான்
ஏறி ஏறி எறங்ரான்
என்னைக்குத்தான் விடியுமோ????

எழுதியவர் : சுடர்விழி.இரா (25-Feb-15, 7:39 pm)
பார்வை : 159

மேலே