இதயத்தின் ராகம்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

என் இனியவளே!
உன் அங்கங்களை
பிரம்மன் மலர்களால்
செதுக்கினானா?
மனதைக் கொள்ளையடித்த
அல்லிப் பூ கண்ணும்
ஓரிரு நாட்கள் பூத்து வாடிய
ரோஜா போன்ற இதழும்
பருத்திப் பூ போன்ற
பாத சலங்கையின் நாதமும்
இரவில் என் சொப்பனங்களில்.....

பள்ளிக்குச் செல்வேன்
உன் வகுப்பறை வாகை
மரத்தடியில் ஒளிந்து நின்று
என்னவளை ரசிப்பேன்
அழகான முத்துப்பற்களின்
குறு நகையால் மெய் மறப்பேன்
படிக்க
முடியவில்லை
நோட்டுகளைப்
புரட்டினால்
உன் முகம்
காதலை
உன்னிடம் நான்
சொல்ல என் நிலைமை
உனக்கு வந்து விட்டால்...
என்பதால் இன்று வரை
உன்னிடம் சொல்லவில்லை

உன் நலம் தோழனிடம்
விசாரிப்பேன்
காதலா? வினவ மறுப்பேன்
உண்மையில் கற்பனையால்
அவளுடன் ஒவ்வொரு
நொடியும் வாழ்கிறேன்
உன் முகம் கண்டு
இரு வருடங்கள்
என் மனதை புரிந்தால்
என்னிடம் தூது அனுப்பு
மூச்சு நிற்கும் வரை
காத்திருக்கிறேன்

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (5-Mar-15, 12:01 am)
Tanglish : ithayaththin raagam
பார்வை : 63

மேலே