பயணங்கள் தொடர்ந்திடு

ஆமையின் முதுகில்
ஏறியும் சவாரி செய்!
ஆனால் ஓய்ந்துவிடாதே!
முயற்சியின் நிறுத்தம்!
முற்றும் வருத்தம்!
பறந்து திரிய,
பயணம் தொடர,
பாதைப் புலப்பட,
புத்துணர்வு கிடைத்திட,
காலங்கள்
கை கூடும் வரை,
களைப்புகள் எல்லாம்
கடந்து போகும் வரை,
ஆமையின் வேகத்தில்,
ஆமையின் முதுகிலும்
சவாரி செய்!
ஓய்ந்து விடாதே!
ஒதுக்கப்படுவாய்!
ஒடுக்கப்படுவாய்!
பயணங்கள் தொடர்ந்திடு!
வழி கிடைத்ததும்
பட்டுப்பூச்சியாய் பறந்திடு!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (9-Mar-15, 4:44 pm)
பார்வை : 97

சிறந்த கவிதைகள்

மேலே