எங்கே...
எந்தன்
உதட்டில் மறைந்து
மாயம் செய்த
மௌனம் புன்னகையாய்
மாற நீ உதிர்க்கும்
புன்னகை பூக்கள் எங்கே...
எந்தன்
மௌன வேள்வி
தடுக்க நீ தொடுக்கும்
கேள்வி கனைகள் எங்கே...
உந்தன் நினைவுதனை
நெஞ்சத்தில்
இருத்திவிட்டால்...
எந்தன் மனதின் அழுத்தம்
மலையளவு...

