ஒரு பழைய புத்தகக் கடை

பாதையோரத்தில்
விரித்திருந்தான்
ஒரு பழைய புத்தகக் கடை
வாங்கினேன் அந்த பழைய புத்தகத்தை
அச்சிட்ட வருடம் இல்லை
ஆரம்பப் பக்கங்களும் முடிவும் இல்லை
எழுதியது யாரோ தெரியவில்லை
துவண்டு கிடந்த பழுப்பு நிறப் பக்கங்களை
மெல்ல மெல்லத் திருப்பினேன்
ஒரு மர நிழலில் நின்றவாறு
வரிகளில் விரிந்தது நிறங்களில் வானவில் !

எவ்வளவு நேரம் படித்தேன் ?
எங்கிருந்து வந்தது கருமுகில் சிதறல்கள் !
தூவிய தூறலில் சாலையின் மண்வாசனை
புத்தகத்தை பாதுகாப்பாக பிளாஸ்டிக் பையில் வைத்து
அணைத்தபடி நனைந்தே நடந்தேன்
உள்ளேயும் வெளியேயும் !
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Mar-15, 10:16 am)
பார்வை : 145

மேலே