தலைப்பு என்னன்னு தெரியலையே

ஹைய்!!!!
கவிதை எழுத போறேனே....
என்ன தலைப்பா???
அஸ்க்கு புஸ்க்கு சொல்ல மாட்டேனே...
ஏனா எனக்கே தெரியாதே.....

ஆனா விட மாட்டேன்
எப்புடியாச்சும் எழுதிபுடணும்...
யாரும் யோசிக்காத மாதிரி..
யாரும் எழுதாத மாதிரி...
இப்புடி ஒரு தலைப்பானு யோசிக்கிற மாதிரி...

உவமை உவமேயமெல்லாம் இருக்கனும்....
ஆனா நிலா, பூ, பொடலங்கா இதெல்லாம் இல்லாம...
ம்ம்ம் முக்கியமா காதல் கத்திரிக்காவும் வேண்டாம்....
எதாச்சும் புதுசா....புதுசா....

அழுகுற மாதிரியும் வேணாம்...
சிரிக்கிற மாதிரியும் வேணாம்....
அதுக்குன்னு எல்லாரையும் போட்டு
கொலப்புற மாதிரியும் வேணாம்....
புதுசா... புதுசா...

படிச்சா கலக்குறனும் சொல்ல கூடாது...
காறியும் துப்ப கூடாது....
கலாய்க்க கூடாது...
காப்பி அடிக்க கூடாது....

அப்புடி ஒரு கவிதை எழுதணும்
இல்லனா நன்றி வணக்கம் சொல்லிட்டு...
போய் பொலப்ப பார்க்கணும்...
என்ன பண்ணலாம்....

ஐடியா.....
அடிக்கபுடாது....
திட்ட புடாது....
நன்றி..
வணக்கம்....

எழுதியவர் : சந்தியா பிரியா (20-Mar-15, 11:29 am)
பார்வை : 160

மேலே