எப்படி நீ என் உறவானாய்

உறவு என்ன உனக்கும் எனக்கும்
தொப்புள் கொடியால் தாயும் உறவானாள்
அணுக்கள் தந்ததனால் தந்தையும் உறவனார்
தாலி கொடி தந்தேன் நான் காதலி என் மனைவியானாள்
என்னில் ஒரு அணுவை தந்தேன் மகனும் இந்த மண்ணில் வந்தான்
உறவுகள் எல்லாமும் என்னோடு நேரடி தொடர்பு கொள்ள
எங்கோ இருந்து வந்த நீ
எப்படி என் உறவானாய்
அழுகையில் கை குட்டை தந்தாய்
சிரிக்கையில் என்னை கண்டு நீயும் மகிழ்ந்தாய்
நான் சென்ற பாதை முள்ளாய் இருப்பினும் உடன் வந்தாய்
இறக்கும் வரை என் உடன் இருக்க
பந்தம் ஏதும் நான் தரவில்லை உனக்கு
எனக்கு ஏனடா பந்தம் என்று சொல்லி
என் தோள் மீது கை வைத்து என்னோடு நடக்கிறாய்
நமக்குள் உறவேதும் வேண்டாம்
இறுதி வரை என்னோடு நீ இருந்தால் போதுமடா...!!!

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (22-Mar-15, 11:15 am)
சேர்த்தது : L.S.Dhandapani
பார்வை : 363

மேலே