மேகமே
நீலக்கடலில் உருவான
கார் மேகமே !
சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து
கொஞ்ச நேரம் விடுதலை தந்தாய்
சூட்டை நீ எடுத்து சுகத்தை எங்களுக்கு தந்தாய்!
நீ வந்தால் வண்ண மயில் ஆடுமாமே!
நீ வான மயிலாயிட்ரே!
கருத்த நிறம் கொண்டாய்!
எப்படி பலவண்ண வானவில்லை தோற்றுவித்தாய்!
நீ அழுது துடைப்பாய்
எங்கள் கண்ணீர் மழைகளை !!!
உன்னை புகழ்ந்து பாடுவது
பரிசில் பெறத்தான்!!!
ஆம்! பொன் மழைகளைதான் பரிசாக !
உருண்டு திரண்டு ஊர் பக்கம் வந்தாயே!
வலைந்து நெளிந்து ஏன் ஊர் தாண்டி சென்றாயோ !
நீ மனமிறங்க மரங்களின் குளிர்காற்று உன் மீது பட வேண்டுமாமே !!!
ஒ! உனக்கும் இதயம் இருக்கிறதா?!
இதோ இன்று ஒரு செடி நடுகிறோம் !!!
அது ஒரு நாள் மரமாக
நீ மனமிரங்கும் நாள் வெகு தொலைவில்லை!!