கடைக்கண் பார்வை

கடைக்கண் பார்வை!
விழி அம்புகள்
இதயத்தை துளைக்குது....
ஓரப் புன்னகை
உவகையில் நனைக்குது..

இமை அரும்புகள்
தூரிகை தேடுது...
புருவத்தின் வளைவுகள்
வானவில் காட்டுது...

பூ விழியோ...
மை விழியோ...
கயல் விழியோ...
மான் விழியோ...

எழுதாத கவிகளெல்லாம்
எழுதத்தான் துடிக்கின்றார்...
எண்ணத்தில் இவள் பார்வை
வண்ணத்தில் குழைகின்றார்....

விழிகளின் வலைக்குள்ளே
என் இதயம் வீழ்ந்ததடி....
மொழிகளின் வகையெல்லாம்
மௌனமாய் ஆனதடி...

சோ.சுப்பிரமணி, குவைத்.
25-03-2015

எழுதியவர் : சோ.சுப்பிரமணி, குவைத். (25-Mar-15, 2:29 pm)
Tanglish : kadaikan parvai
பார்வை : 946

சிறந்த கவிதைகள்

மேலே