இதயம் கனக்கிறது

என்று நான் உன்னை கண்டேனோ
அன்றிலிருந்து என் பார்வைகள் புதிதானதடா!

என்று உன்னை நினைக்க தொடங்கினேனோ
அன்றிலிருந்து நான் சுவாசிக்கும் காற்றும் புதிதானதடா!

என்னை மறந்து உன்னை பார்க்கும் என் விழிகள்
நீ பார்க்கும் போது சற்றே தடுமாறுதடா!

உன்னை பார்த்ததும் என்னை அறியாமல்
என் இதழ்கள் புன்னகைப்பதை உணர்ந்தேனடா!

ஒரு நாள் முழுதும் உன்னுடன் இருந்தாலும்
நீ சென்ற அடுத்த நொடி என் இதயம் கனக்கிறதடா!
உன் பிரிவினால்!!!

எழுதியவர் : நந்தினி மோகனமுருகன் (25-Mar-15, 4:31 pm)
பார்வை : 179

மேலே