தாமரை ஊமத்தை

தாமரையை எழுதியவன்
நெஞ்சைத் தொடவில்லை
ஊமத்தையை தொட்டவன்
உள்ள்த்தைத் தொட்டுவிட்டான்
தாமரையின் அழகிலும்
ஊமத்தையின் இழிவிலும்
கவிதை இல்லை
கவிதையின் அழகிலும்
எழுதுபவன் திறமையிலும்
வாழும் கவிதை !

கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Mar-15, 6:41 pm)
பார்வை : 111

மேலே