நிரந்தரமில்லை
மரணிக்க விரும்பினேன்...
ஒரு முறை
உலகை அல்ல
சில இடங்களையாவது
பார்த்து வரலாம் என
முடிவு செய்தேன்...
கோயில் குளம் என்று
சுத்திவிட்டு இறுதியில்
ஒரு மருத்துவமனையை
கடந்து சென்றேன்
அங்கு மரண ஓலம்
ஒலித்து கொண்டிருந்தது...
உள்ளத்தில் ஒரு நெருடல்!
மரணத்தின் வாசனையை
நுகர முடிந்தது...
வாழ்கையில் எதுவும்
நிரந்தரமில்லை என்று
சிலர் பேச செவிகளில் விழுந்தது ...
நிரந்தரமில்லா வாழ்க்கையில்
என் பிரச்சனைகளும்
நிரந்தரமில்லை என்று
யாரோ செவிகளுக்கு
அருகில் கிசுகிசுத்ததை
போல் இருந்தது...இப்பொழுது
என் முடிவும் கூட
நிரந்தரமில்லாமலே போனது...