பாடல்
றவையாப் பறக்கிறோம்,
காத்துல மெதக்குறோம்,
போற வழியில,
பூக்களா சிரிக்கிறோம்!
எங்க ஊரு ஒலக,
ஊரா நினைக்கிறோம்!
ஏ வீடு வாசல் வீதி
ஒன்னும் வேணாம்!
ஏ காடு மேடு கடலத்
தாண்டி போவோம்!
சூரியன் போல
நாங்க சுழலுவோம்,
சோகம் வந்தா
குப்பையில வீசுவோம்!
பூமி பந்து மேல
ஒத்துயடி பாத போடுவோம்.
அந்த வானவில்லு,
எங்களுக்கு சோடி.
தினம் வட்ட நிலா,
கூட சில்லு ஆடி.
மேகம் ஏறி,
வெரசா நடப்போமே.
அந்த மின்னல் கொடிய,
கயிறா திரிப்போமே!
பறவையா…
ஏ ஆடு மாடு கோழி
எங்களுக்கு கூட்டு!
அத போல வாழ
தேவையில்ல நோட்டு!
கண்டத வாங்கி
சேர்க்க நினைக்கல!
ஒரு தந்திரம் போட்டு
ஊர கெடுக்கல!
நாளை என்ன ஆகும்
எண்ணி வாழ மாட்டோம்!
இந்த சின்னம்சிறு பிஞ்சு போல
உள்ள வர துள்ளி விளையாட
காலம்பூரா கவல கிடையாதே
நானா போற பாத
எதுவும் முடியாதே
பறவையா பறக்கிறோம்
காத்துல மெதக்குறோம்!