மறந்து விடாதே

இன்னுமா என்னை நினைத்துக்கொண்டிருக்கிறாய்
ஆச்சரியமாய் அவள் கேட்டது
அதிர்ச்சியாக இருந்தது.
மறந்துவிடாதே என்று
விடைபெறும் போது
நீ தானே சொன்னாய்
நூறு முறை என்றேன்.
அப்படியா சொன்னேன் என்று
ஐயத்தோடு கேட்டாள்.
நன்றாக யோசித்துப் பார்த்தேன் –
மறந்து விடாதே என்றுதான் சொன்னாள்.
மறக்க மாட்டேன் என்று சொல்லவேயில்லை.

எழுதியவர் : சேயோன் யாழ்வேந்தன் (13-Apr-15, 7:30 pm)
Tanglish : maranthu vidaathe
பார்வை : 94

மேலே