அவள் மெல்லச் சிரித்தாள்------அஹமது அலி----

நிலவும்
சூரியனும்
ஒரு சேர உதிப்பது
உன் சிரிப்பில் தான்.....
//0-0//
அப்படிச் சிரிக்காதே
இதயம் சிறகடிக்க
வானம் போதவில்லை...
//0-0//
உந்தன் சிரிப்பென்னை
விசாரணையின்றி
சிறை பிடிக்கிறது
ஆயுள் கைதியாகவா?-அன்றியும்
மரண தண்டனையும்
மகிழ்வே......
//0-0//
நீ சிரித்தாள்
சிரிப்பொளி(லி)
வானத்தில் ஜொலிக்கிறது
வானவில்லாக....
//0-0-//
என்னடி உன் சிரிப்பு
குழந்தையும்
குமரியும்
குழைந்து குழைந்து....
//0-0///
உன் நிழல் கூட
சிரிப்பதை
நிஜத்தில் கண்டேன்
நிழல் சிரிப்பிலும் உனக்கு
நிகரில்லை.......
//0-0//
தயவு செய்து
தொட்டிச் செடியில் பூத்த
ரோஜாவை பார்க்காதே
உன் சிரிப்பைக் கண்டு
வெட்கத்தில் நிறம்
மாறப் போகிறது....

எழுதியவர் : அலிநகர்.அஹமது அலி (22-Apr-15, 10:08 am)
பார்வை : 877

மேலே