சென்னையிலிருந்து புறப்படும்

பயணிகளின் கவனத்திற்கு ..
சென்னையிலிருந்து ..
..
அதற்கு மேல்
எதுவும் விழவில்லை..
அவள் ..
காதுகளில்..
..
இறங்கி ஓடி
வீட்டுக்கே
போய் விடலாமா ..
என்று எண்ணியவளின்
கைகள்..
கழுத்தை தடவியது..
..
காலியாயிருந்த
கழுத்தில் ..
தாலி எங்கே..
..
எல்லோரையும் ..
விலக்கியபடி..
நடைமேடையில் ..
பித்துப் பிடித்தவள் போல்
ஒடினாள்..
..
எதிரே..
மூச்சிரைக்க
ஓடி வந்த
அவள் கணவனின்
கையில்..
ஒரு..
இட்டிலிப் பார்சலும்..
இன்னொரு ..
கைப்பையும்..
..
சுசீலா..
கோபத்தில்
அடித்து விட்டேன் ..
மன்னித்து விடு..
..
இது பசிக்கு..இட்டிலி
இது உனக்கு..உன் தாலி ..
கோபம் தீர்ந்ததும்..
உன் அப்பாவிடம் சொல்லி
கைப்பேசியில் ..
கூப்பிடச்சொல்..
..
சற்று நேரத்தில்
அவனது
மோட்டார் சைக்கிளில்
அவள்..!
..
யாரிடம்தான்
தவறு இல்லை..?

எழுதியவர் : கருணா (28-Apr-15, 9:13 pm)
பார்வை : 99

மேலே