அன்னையே உனக்கு -அன்னையர் தின வாழ்த்துக்கள்

கருவறையில் இடம்கொடுத்து
மார்போடு சேர்த்தணைத்து ..
கண்ணே மணியே என்று
தாலாட்டில் உறங்க வைத்து ..
உதிரத்தை உருக்கி தினம்
உணவாய் தந்த பாலும்
விழிநீராய் வழியுதம்மா
வேதனையை தூண்டுதம்மா ..

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

வஞ்சியே உன்னை வர்ணிக்க
வார்த்தைகள் தேடுகையில்
உன் அன்பை விட அழகான
வார்த்தை ஒன்று இல்லையென்று
அகராதியும் அதிர்ச்சியாகி
அன்னையே உன்னை தேடுதம்மா ..

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

பெற்றவளே உன்னை போற்ற
பூமிதனில் ஓர் நாளாம்.!
புத்திக்கெட்ட மனித இனம்
பொருந்திக் கொண்டது இந்நாளை

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥..

உயிர் கொடுத்த உத்தமியே
உனக்கொரு நாள் போதாது
உலகம்கூட உன்அன்பிற்கு
ஈடு இணை ஆகாது ..

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

கண்மணியே என் அருகில் -நீ இல்லை என்றபோதும்
இறையடியில் எப்போதும் இன்பமாய் வாழ்ந்திடனும் ..
இறையருளும் என் நினைவும்
என்றென்றும் உன்னோடு !!!!!!!!!!!

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

(வாரியணைக்க நீ இல்லை
இருப்பினும் வாழ்த்துரைத்தேன்
நானுனக்கு ......!!!

உலகில் வாழும் அனைத்து அன்னையருக்கும் இதயம் கனிந்த "அன்னையர் தின வாழ்த்துக்கள் "

வணங்குகின்றோம் அன்னையரே வாழ்த்திடுங்கள் எங்களை )

எழுதியவர் : கயல்விழி (9-May-15, 8:28 pm)
பார்வை : 4665

மேலே