யானை கூட பறந்திடும்

இறக்கைக் கட்டிப் பறக்க கள்ளமில்லா
இதயமிருந்தால் போதும்
சிரித்துக் கொண்டே
இன்னல்கள் அனைத்தையும் தாண்டி
சகாப்தம் படைத்திடலாம்.
தடையாய் பெரும் பாலமே எழுப்பினாலும்
தாண்டிட தூய மனமிருந்தால் போதும்
தொல்லைகளை எல்லையில்லாமல் அடுக்கினாலும்
பிள்ளை மனமொன்று கொண்டால் போராடலாம்
வன்மங்கள் ,பொறாமையில் பெருஞ்சுவர் கூட
வளர்த்திடட்டும்
நல்லன்பால் சிறு துகளாய் நொறுக்கிடலாம்
யானை கூட பறந்திடும்
பட்டாம் பூச்சியின் சிறகு தனக்கு
பொருத்தப்பட்டதாய் எண்ணிடின்
எண்ணங்களை சிறகாக்கி
இன்னல் மேகத்தைக் கடந்திடுங்கள்
வானில் உயர தடை
மேகத்தை தகர்த்து
நட்சத்திரமாய் ஒளிவிடுங்கள்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (12-May-15, 2:45 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 109

மேலே