வான் சென்ற சிறு குழந்தைகளுக்கு அஞ்சலி

பாகிஸ்தான் மண்ணிலே
முளைத்த பிஞ்சுகளே.....
துளிர்விடும் முன்னரே உங்களை
துண்டித்து விட்டானே - அந்த
துரோகி.....!!

பள்ளிக்குச் சென்ற உங்களை
பாடை ஏற்றிவிட்டானே - அந்த
பாதகன்....!!
வெள்ளைப் பூக்களே உங்களை
வெட்டி விட்டானே - அந்த
வேட்டைக்காரன்...!!

வேதம் மீறிய தீவிரவாதி
மறு பிறப்பெடுப்பான்
ஆயிரம் ஆயிரம் பிறவி,
புழுவாய்...
பூச்சியாய்....
பல்லியாய்...

வலிக்க வலிக்கப் பெற்றெடுத்தாள்
உன் அன்னை - இன்று அந்த
வலி உணர்கின்றேனே நான்
உன்னைப் பெறாமலே......

அழகிய செல்வங்களே - இனி
அண்ட வான் வெளியிலே
மின்னிடுங்கள் நட்சத்திரங்களாய்..

உங்களைத் துளைத்த தோட்டாக்கள்
உங்கள் சொர்கத்திலே மலரட்டும்
முள்ளில்லா பூக்களாய்...

இனி,
ஒவ்வொரு பிறையிலும் காண்பேன்
உங்கள் முழு மதி முகங்களை...
அல்லாவின் அரண்மனையிலே
அமைதியாய் உறங்கிடு
செல்ல குட்டி....
பட்டு குட்டி...
அம்மு குட்டி.......

எழுதியவர் : தப்தி செல்வராஜ், சாத்தூர் (29-May-15, 5:47 pm)
பார்வை : 185

மேலே