ஞாபகம்
ஞாபகம்
""""""""""""
என்னை நீ தலை கோதியதும்
உன்னுள் நான் முகம்
புதைத்ததும்!
நம்மில் நாம் உயிர் கரைந்ததும்!
விசும்பலுடனும் வேதனையுடனும்
நீ என்னை விட்டுப் பிரிந்ததும்!
என் உணர்வு அறுந்து உடல்
வெட்டுண்டு"""
புழுவென துடித்ததும்!
இப்பொழுது மாத்திரமல்ல
எப்பொதும் ஞாபகம் இருக்கும்!!!