வலி தாங்கும் மனங்கள்

உளி தாங்கும் கற்கள் தானே
உலகத்திலே சிலையாகும்...........
பட்டை தீட்டிய கற்கள் தானே
பளபளக்கும் வைரம் ஆகும்...............
நெருப்பில் உருக்கிய தங்கம் தானே
நங்கையர் மயங்கும் நகையாகும்...............
வலி தாங்கும் மனங்கள் தானே
வாழ்க்கையிலே வெற்றி பெறும் !