நீயும் நானும் யாரோ இன்று நினைவில் வாழ கற்றது நன்று

அன்றொருநாள் அந்தி மாலைப் பொழுதினில்

தென்றல் வந்து வீச மல்லிகை வாசம் பரப்ப

குளத்தடி பிள்ளையார் கோவிலில் நாம் சந்தித்தோம்

அது ஒரு தற்சையல் சந்திப்பே அன்றோ -ஆம்

அன்று என்னை நீ அறியாய் உன்னை நான் அறிந்திலேன்

கண்ணும் கண்ணும் கலந்தபின்னே பிரிந்தோம்

சந்திப்பு தொடருமா தெரியாது அப்போது !




அன்று எங்கள் கல்லுரி அலுவலகத்தில் மீண்டும்

உன்னை சந்திக்க நேர்ந்தது ஆண்டவன் செயலா

நான் அறியேன் இருக்கலாம் என்றே நினைத்தேன்

இன்றைய சந்திப்பில் எங்கள் கண்கள் வார்த்தைகள்

பரிமாறிக் கொண்டனவே ! இதழ்களில் புன்னகை

சந்திப்பு அக்கணமே காதலாய் மாறியதே!



மெல்ல மெல்ல அரும்பிய அக்காதல்

எங்கள் வீட்டினரின் கவனத்திற்கும் வந்திடவே

கல்லுரி படிப்பு முடிந்த பின்னே திருமணத்தில்

வந்து முடிந்தது !


காலமும் வெகு வேகமாய் சுழன்றது

எங்கள் வாழ்க்கைப் பயணமும் இனிதாய்

பரஸ்பர காதலோடு பயணித்தது - பிள்ளைகள்

பெற்றெடுத்தோம் செவ்வனே வளர்த்தோம்

நல்ல படிப்பும் பாங்கான வாழ்விற்கும் வழி

வகுத்து தந்தோம் -காலம் வந்தது பிள்ளைகளும்

கூட்டை விட்டு பிரிந்து தனிமை நாடி

பறந்து சென்ற பின்னே - மீண்டும் நாங்கள்

இருவராய் பழைய காதலராய் இருப்பது உணர்ந்தோம்

காலம் காலனை மாறியது ஒரு நாள் -இது

காலம் செய்யும் கோலமே ஆனால் அதில்

என்னருமைக் காதலி என் மனைவி என்னைவிட்டு

பிரிந்து சென்றாள் -சென்றவள் மனதிலே நிற்கின்றாள்

இன்றளவும் -ஆம் அன்று அந்த அந்தி மாலை சந்திப்பு

மலரும் நினைவாய் மனதில் நிறைந்து இன்றளவும்

என்னை வாழ வைக்கிறதே இது என்ன

தெய்வீக உறவல்லவா இனிய நினைவே !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Jun-15, 2:12 pm)
பார்வை : 92

மேலே