அம்மா

உயிரை வதைத்து உலகில் வாழ்பவன் மிருகம் என்பாயே
உன் உடலை வதைத்து உயிராய் பிறந்தேன் மகனே என்றாயே
உன் கண்ணை மறைக்கும் பசியில் , நான் அமிர்தம் உண்டாலும்
என் கண்ணில் இருக்கும் பசியால் உனக்கோ அமிர்தம் பிடிகதேன்பயே
பிச்சை எடுத்தும் கற்றல் நன்றென ஔவை சொன்னாலே , நீ
பிச்சை எடுத்தும் நான் கற்றல் நன்றென யார்தான் சொன்னாரோ
உன் வலியில் பிறந்தேன் ,உன் பசியில் வளர்ந்தேன் ,உன் பிச்சையில் படித்தேன்
இன்று துணையை அடைந்தேன் ஏனோ உன்னை மறந்தேன் ...

எழுதியவர் : (28-Jun-15, 10:43 pm)
Tanglish : amma
பார்வை : 189

மேலே