புரியாத உறவா

உன் புன்னகையில்
நின்றதென் பேச்சு
உன் பேச்சில்
தோற்றதென் மூச்சு

உன்னால் கண்டேன்
நான் காதலை
அதனால் பிறரிடம்
கொண்டேன் நான்
ஊடலை

சத்தியமாய் சொல்கிறேன்
பொய்யல்ல மெய்யன்பே.....

அந்த தொடரூந்தில்
மறுமுறை உனைபார்த்தால்
செத்தே போவேன் நான்

ஒன்று மட்டும்
புரியவில்லை எனக்கு
உன் பெயரென்ன ?
உன் ஊரென்ன ?

எழுதியவர் : fasrina (8-Jul-15, 12:05 pm)
Tanglish : puriyaatha uravaa
பார்வை : 77

மேலே