முகமூடி பூக்கள்

வாழ்க்கையின் ஒவ்வொரு
வினாடியும் எதோ ஒன்றை
வினவிக்கொண்டே இருக்கின்றன
என்னிடம்...........

வாய்விட்டு சிரித்தாள்
நீ மனதார சிரிக்கிறாய
எதையோ மறைக்க சிரிக்கிறாய
என்கிறது ........

அழுதாலும் விடுவிதில்லை
நீலிக்கண்ணீரா
நிஜமான கண்ணீரா
என்கிறது ,,,,,,,,,,,

கண்கள் திறக்கும் போதே
பற்றிக்கொள்கிறது
அந்நாள் பற்றிய பயம் ,,,,,,,,,

மேடையில்லாமலே கதை கேட்காமலே
நடிக்க ஆயிரம் நடிகர்கள்
என்னுடன்
நண்பர் உறவினர்
தெரிந்தவர் என்ற பெயரில் ,,,,,,,,

எதோ எப்படியோ
வாழ்க்கை ஓடிக்கொண்டேதான்
இருக்கிறது
நானும் சலிக்காமல்
அதன் பின்னே ஓடிக்கொண்டு இருக்கின்றேன்
முகமூடி இன்றி ,,,,,

எழுதியவர் : ilayarani (9-Jul-15, 3:33 pm)
Tanglish : mugamoodi pookal
பார்வை : 191

மேலே