மனங்கவர் காதலி - 10

(கரைசேருங் காலமெக்காலம்?)

காற்றினிலே நான்பறக்கும்
ஓடமடீ.....காதலீ!
கால்புதையும் சேற்றினிலே
தவமியற்றுந் தாமரையை
நாணமின்றித் தூற்றுகின்றேன்!

நான்மறையும் நாளதனை
நானறியும் நாளறியா
பேதைமையில் காற்றதனில்
நானலைந்து வாடுகின்றேன்!

நீரதனில் நீந்தத்தகும்
ஓடமெனை நீரினுக்கே
மீண்டுவரும் பேறுதனை
மீட்டுத் தரப் பேரொளியே....... நீ வருவாய்!

சேறுதனில் தவமியற்றும்
தாமரையின் தாளதனை
போய்மெதுவாய்த் தாங்கியுந்தன்
கால்களிலே சூட்டிமனம்
நான்மகிழ நான்விரும்பும்
பேரொளியே நீவருவாய்,
ஓடம் கரை சேர்ந்திடவே....!!


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்.

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (11-Jul-15, 5:47 am)
பார்வை : 151

மேலே