நேற்றுதானே பிரிந்தாய்
என்னவனே ...
நேற்றுதானே என்னை ....
பிரிந்து சென்றாய் .....!!!
என் உடல் ஏதோ....
ஒருவாரத்துக்கு முன் ...
பிரிந்து சென்றதுபோல் ...
தோல்கள் சுருங்கி ...
தேமல் படர்கிறதே ....!!!
+
குறள் 1278
+
குறிப்பறிவுறுத்தல்
+
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 198