வாக்குகள் தேடி

என் கவிதைக்கு கிடைத்த பரிசோ , பச்சியில் மிஞ்சிய எண்ணெய்.....

என் சிந்தனைக்கு கிடைத்த பரிசோ , இவன் பைத்தியக்காரன் ...

என் எழுத்துக்கு கிடைத்த பரிசோ , மையை வீணாக்காதே ...

என் உழைபிர்க்கு கிடைத்த பரிசோ , தெண்டச்சோறு ....

என் படைப்புகள் தேடிய பரிசோ , வெறும் புள்ளிகல்தானே ....

காகித இதயம் அழுதிடும் , என் எழுத்துக்கள் தீண்டியபோது ....
கவின்ஞர்கள் இதயம் அழுதிடும் ,படைப்புகள் வாக்கினை நாடியபோது ....

என் எழுத்துக்கள் தீண்டையில் , காகிதம் அழுகவோ நாக்கு இல்லை ...
என் படைப்புகள் படிதாண்டையில் , போட்டியில் சேர்ந்திட வாக்கு இல்லை....

பிறந்த குட்டிக்கு பால்குடிக்கவோ பள்ளிதேவையில்லை .....
சிறந்த படைப்பினை தேர்ந்தெடுக்கவோ புள்ளிதேவையில்லை .....

......................................... மனம் புண்படும்படி இருந்தால் மன்னிக்கவும் ..................................

எழுதியவர் : (17-Jul-15, 3:13 pm)
சேர்த்தது : ஆனந்
பார்வை : 106

மேலே