தீபமாய் வா
ஒரு நாளைக்கு
ஒரு இரவு ஒரு பகலாம்
நமக்கு இரவும் பகலாய்
பகலும் பகலாய்
ஏனிப்படி மாறினோம்!
நீயில்லா நொடிகள்
என் மீது
துயரச்சுவர்கள்
சூழும் நாலா புறமும்!
அப்பொழுதில்
இருண்டு கிடக்கும்
என் மனக்குகை !
தீபமாய் வா !
தீபமேந்தி வா !
பட்டாம் பூச்சிகளுக்கு
கோபம் உன் மீது
பூ வென ஏமாந்து விட்டனவாம் !
எனக்கோ பூக்களின் மீதே கோபம்
அதெப்படி உன்னை நகல் எடுக்கலாம் !
நகல் -xerox