தீபமாய் வா

ஒரு நாளைக்கு
ஒரு இரவு ஒரு பகலாம்
நமக்கு இரவும் பகலாய்
பகலும் பகலாய்
ஏனிப்படி மாறினோம்!

நீயில்லா நொடிகள்
என் மீது
துயரச்சுவர்கள்
சூழும் நாலா புறமும்!
அப்பொழுதில்
இருண்டு கிடக்கும்
என் மனக்குகை !

தீபமாய் வா !
தீபமேந்தி வா !

பட்டாம் பூச்சிகளுக்கு
கோபம் உன் மீது
பூ வென ஏமாந்து விட்டனவாம் !

எனக்கோ பூக்களின் மீதே கோபம்
அதெப்படி உன்னை நகல் எடுக்கலாம் !

நகல் -xerox

எழுதியவர் : அர்ஜுன் (20-Jul-15, 7:46 pm)
சேர்த்தது : அர்ஜுன்
Tanglish : theebamaai vaa
பார்வை : 106

மேலே