நூலகம்
![](https://eluthu.com/images/loading.gif)
அறிவின் அகன்ற வாசல்
நூலகம்
ஆறறிவு விரல்கள் புரட்டிப் பார்க்கும்
எண்ணங்களின் பக்கம்
சிந்தனைப் பூக்கள் சிரிக்கும்
அழகிய பூந்தோட்டம்
எழில் கற்பனைகள் அரங்கேறும்
இலக்கிய மன்றம்
உலகினை உனக்குக் காட்டும்
விரிந்த சாளரம்
இதயத்தை வானுக்கு உயர்த்தும்
ராக்கெட் தளம் !
----கவின் சாரலன்
கவிக் குறிப்பு : எழுத்தில் நான்காண்டுப் பயணத்தில் இத்துடன் கவிதைகள்
இரண்டாயிரம்.. இவ்வாறு எண்ணிக்கையில் ஓர் இலக்கை எட்டும் போது
நிறுத்திவிடலாம் என்று எண்ணுவதுண்டு .ஆயினும் தொடர்கிறேன்
கவிதை
எழுத் எழுத வரும் போதை
நான் ஏந்தி நிற்கும் மதுக் கிண்ணம் !
----என்று எழுதினேன். பார்ப்போம் .இங்கே மது விலக்கை அமுல் படுத்த
வேண்டும் என்று சொல்ல மாட்டீகள் என்று நினைக்கிறேன் .