கலாமிற்கு சலாம்

பாரத தாயின் தவப்புதல்வன்;
ஏழையாய் பிறந்தவன்;
கலத்தில் சிறந்தவன்;
விண்கலத்தின் நாயகன்;
குடியரசை ஆண்டவன்;
எளிமையாய் வாழ்ந்தவன்;
தமிழுக்கு பெருமை சேர்த்தவன் - தமிழனாய்
தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தவன்;
இளைங்கர்களின் முன்னோடியாய்,
இதயத்தில் வாழ்ந்தவன்;
மாற்றம் தந்தவனுக்கு,
ஏனிந்த தாடுமாற்றமோ???
அக்னி சிறகுகளை தந்தவன்,
தன் சிறகுகளை அடக்கிகொண்டானே!
கனவு காண சொன்னவன்,
நிரந்தரமாக உறங்குகிறானே!
சூரியனை மறைக்க முடியுமா?
கடலலைகளை நிறுத்தமுடியுமா?
மண்ணின் மைந்தன் மறைந்தாலும்,
நிரந்தரமாக உறங்கினாலும்,
ஒளி வீசிக்கொண்டே இருப்பான் - எங்கள்
நினைவலையில் தவழ்ந்துகொண்டே இருப்பான்;
அயராது உழைத்தவனுக்கு,
ஓய்வை மறந்தவனுக்கு,
இந்த ஓய்வு தேவைதான்;
உறங்கட்டும் விட்டு விடுங்கள்;
காலம் கலாமை மறைத்தாலும்,
ஞாலம் கலாமை மறவாது!!!
(நீ அமைத்த பாதையில் நாங்கள் பயணிப்போம்;
வல்லரசு இந்தியாவை நோக்கி!!!)