கணவனே என் காதலன்
தாயின் பாசம் தந்தான்
தந்தையின் நேசம் தந்தான்
தமையனின் உள்ளம் தந்தான்
தோழியின் ஊக்கம் தந்தான்
குருவின் அறிவுரை தந்தான்
குறையாத அன்பு தந்தான்
சோதனையில் கரத்தைத் தந்தான்
சாதனையில் சிரத்தைத் தந்தான்
கல்யாண மாலை தந்தான்
காதலெனும் அமுது தந்தான்
தாய்மை எனும் பதவி தந்தான்
வாழ்வினுக்கோர் அர்த்தம் தந்தான்
எங்கிருந்தோ என்னில் வந்தான்
என்மனம் கவர்ந்து நின்றான்
என் கணவன் என்னுமவன்
என்றும் என் காதலனே!
- ரத்னமாலா புரூஸ்