நினைவஞ்சலி

'கலாம்' காலமாகிவிட்டார்,
காற்றில் கரைந்தது
அவர் சுவாசம்........

அறிவியல் 'சூரியன்'
அஸ்தமனம் ஆகிவிட்டது - இனி
உதயம் இல்லாவிட்டாலும்
நம் உயிரில் கலந்துவிட்டது
அவர் உணர்வுகள் ........

அறிவியலும், தமிழும்
கலந்த கலவை - அந்த
ஆகாயமும் உனக்கு ஓர் அன்னை,
செயற்கை கோள் அனுப்பிய
"செந்தமிழன்" நீ
சளைக்காமல் மனங்களை
செதுக்கிய ' இந்தியன்' நீ......

ஆடம்பரம் இல்ல அறிவியல் சிற்பியே!
நீ 'கனவு' என்ற சொல்லை
காற்றில் கலந்து இன்றைய இளைஞர்களை
சுவாசிக்க செய்து விட்டாய் - இனி
சுடர் விடும் உங்கள் எண்ணங்கள்
எங்கள் மனதில்.............................

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (2-Aug-15, 12:10 pm)
பார்வை : 108

மேலே