தவணைமுறை

தவணைமுறை புன்னகையின்
வாழ்நாளில் விழும் கன்னக்குழிவுகளை -என்
கண்களால் நிரப்புகிறேன்

நெற்றிப்பரப்பில் தவறிவிழும்
ஒற்றைமுடியை -என்
நாசிக்காற்றால் விலக்க நினைக்கிறேன்

தொலைந்து போன முகவரியை உன்
முதுகில் தடவித்தடவி தேடுகிறேன் -நீ
இதழ்பிரிக்கும் ஓசைகளை -இடது
காதில் வாங்கிக்கொண்டு
இறுக்கி அணைக்கிறேன்.

எழுதியவர் : சார்லி கிருபாகரன் (9-Aug-15, 6:02 pm)
பார்வை : 107

மேலே