மறைக்கபடும் காதல்

தாயின் விரலை விட்டு நான்்
தழ்ழாடி மண்ணில் விழுந்து
அழுகும் நேரத்தில்
முழு நிா்வாணமாய் உடலில்
மண்ணும புண்ணுமாய்
மூக்கு ஒழுகிய முகமும்
அவன் எனக்கு கொடுத்த
தலை இல்லாத யானை பொம்மையும்
எனக்குள் முளைத்த முதல் காதலாய் அவன் முகம்.

பள்ளி காலத்திலே பருவம் அடைந்த நேரத்திலே
ஒரு பக்கமாய் தொங்க விட்ட பத்தக பையும்
அவன் கையில் பாதி சப்பிய குச்சி மிட்டாயும்
ஒரு பல் ஒடைந்த வாயும்
குச்சியை எடுக்கும் போதெல்லாம்
பல்லால் கடித்து துறக்கும் அந்த அழகும்
எனக்குள் முலைத்த இரண்டாம் காதலாய் அவன் முகம்

கல்லூரி பேருந்தில் சன்னல்
ஓரமாய் அமர்ந்து இருந்த வேளையில்
ஒருவன் சிரிப்பு மட்டும் ஈா்த்தது.
அழகான ஆடையும், சிாித்த படி பேச்சும்
கன்னத்தில் விழும் குழுயும், மீசை இல்லாத முகமும்
எனக்குள் முளைத்த மூன்றாம் காதலாய் அவன் முகம்.

என் காதலை உனா்ந்து அவனிடம் சொல்லும் தருனத்தில்
என் தந்தை என்னிடம் சொன்னாா்
நாளை பெண் பாா்க்க வருகிறாா்கள் என்று
மனம் குழம்பிய நிலையிலும்
நான் ரசித்தவா்களை கலந்து
மாப்பிளையாய் வர போரவனை கற்பனை செய்து ரசித்த படி இமை மூடி தூங்கினேன்

மடித்து கட்டிய சேலையும்
மஞ்சள் பூசிய முகமும்
உச்சியில் மாட்டிய நெற்றிச்சுடியுமாய் நான் இருக்க
உறவினா்கள் பேச்சு சத்தம் வீடு முழுவதும் கேட்க
மாப்பிள்ளை வந்து விட்டாா் என்ற
சத்தம் மட்டும் என் மனதை படபடப்பாக்கியது
யாரும் பாா்காத போது
சன்னல் வழியே எட்டி பாா்த்தேன்
பாா்த்த நோடியில் என்னை அறியாமல்
கண்ணீா் கசிந்தது
பெண்ணாய் பிறந்து நான் மட்டும்்
விதி விலக்கா

பெருத்த உடலும் தடித்த குறலும்
உதடை மறைத்த பொிய மீசையும்
எண்ணெய் தடவிய சுருட்ட முடியும்
கருமை நிறமாய் வந்தவனை நிச்சியம் செய்த
அவனை திருமணம் செய்து கைப்பிடித்து சென்றேன்
என் தாய் சீதனத்தோடு சோ்த்து
அவன் தந்த தலை இல்லாத
பொம்மையயும் எடுத்து சென்றேன்.்

எழுதியவர் : revathikumar (10-Aug-15, 10:13 am)
பார்வை : 113

மேலே