ஆலம் விழுதுகளே
2011 ல் புதுக் கவிதை
நம் நண்பர்கள்
வாழ்க்கை என்னும் பூந்தோட்டத்தில்
மலர்ந்த மலர்களே !
நம்பிக்கை என்னும் விதையை ஊன்றி,
இன்பத்திலும் துன்பத்திலும் தோள் கொடுத்து
துணையிருக்கும் தூண்களே !
கண்ணீராலும், சிரிப்பாலும் நீரூற்றி,
நட்பை வளர்த்து உண்மையும் நேசமுமாய்
வேரூன்றியவர்களே !
பள்ளிப் பருவம் முதலாய்
எனைப் புரிந்து என் வளர்சசி கண்டு
என்னை ஆல விருட்சமாய் செய்த
ஆலம் விழுதுகளே.