இப்படிக்கு நான்
அன்றைய பொழுதுகளில்
காதலியாக தெரிந்த அவள்
இன்று எனக்கு கவிதையாக
தெரிகிறாள்.
உயிரோடு எரியும் பிணத்தைப்
போல தவிக்கிறேன் ...
அதனால் தானோ என்னவோ இன்று
தூசியாய் மாறி என் கண்ணை
நிறைக்கிறாய்.
அன்று உன்னுடன் கடலில்
விளையாடியதை நினைத்து
இன்று கனவில் நிழலாடுகிறேன்.
இப்படிக்கு நான்.