கவிதையும் காதலும் - 2

கண்ணொடு கண்ணினை நோக்கின்
காதல்,
மௌனித்து மொழி உருவெடுத்தல்
கவிதை.

நசித்து நினைந்து நிலைக்கும் பார்வை
உண்டாயின் காதல்
நனையும் நாக்கும் உலர்ந்த உதடும்
உமிழுமாயின் கவிதை.

பதிந்த பார்வையில் பொதிந்த உருவை
உறவாய் உயிராய் நினைந்துருகும்
காதல்;

தெளிந்த கருவை சுமந்து அழகில் தோய்த்து
உணர்வெனும் உடையில் தகிப்பது
கவிதை.

காதலை அணிந்து கவிதை நடையிடும்;
கவிதையின் மறைவில் காதல் கண் சிமிட்டும்.

காதல் நோயுற கவிதை மருந்தாகும்
கவிதை சிகிச்சையில் காதலும் குணமுறும்....
காதல் மூச்சினால் கவிதை பேச்சாகும்,
கவிதை பேதையானால் காதலும் ஜடமாகும்..

காதலுடன் கவிதை வாழ்ந்திடவே
கண் வழி மௌனம் கை எழுத்திடுதே ....

எழுதியவர் : செல்வமணி (1-Sep-15, 12:45 am)
பார்வை : 102

மேலே