விதி கவிதை

*
அதிகாலை வேளைத் தவிர
மற்ற பொழுதுகளில்
கொதிப்பேற்றும் வெயிலில்
பாதையோரச் செடிகளில்
காய்ந்து கருகி வாடுகிறது
மலர்கள்
மனிதன் வாடினால் விதி
மலர்கள் வாடினால் நியதி.
*
நடந்ததை வெளியில்
சொன்னால் வெட்கம்
எவரிடமேனும் சொல்லி
பகர்ந்திடாவிட்டால்
தாங்கமுடியாதத் துக்கம்.
மனமொரு
இருதலைக்கொள்ளி.
இதற்கில்லை முற்றுப்புள்ளி.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (3-Sep-15, 9:39 am)
பார்வை : 118

மேலே