மதநல்லிணக்கம்

மதப்போர்கள் மனிதனை ..,
அழித்து வருகின்றன .

மனித சமுதாயம் ..,
படைத்திட்ட மற்றொரு ..,
ஆயுதம் சாதி.

மனிதனுக்குள் என்னடா ..,
பேதம் .
ஒற்றுமை உணர்வை ..,
மட்டுமே போதிக்கிறது .,
வேதம் .

கானகத்து உயிர்களுக்குள் ..,
வேற்றுமை உண்டு .
தத்தம் இனத்திடையே ..,
ஒற்றுமையாய் இருக்கும் .

மொழிகளால் ஏற்படும் .,
போர்கள் ..,
மனித இனங்களில் .,
ஏனடா ..!

மொழிகளை படித்தால்..,
நீயும் மேதை தானடா ..!

நாட்டுக்குள்ளே போர்கள் ..,
நம் பலவீனத்தை காட்டும்..,
குறைகள் .

அவனியில் நாமும் .,
நிலைத்திட ..,
அனைவரும் ஒன்றாய் ..,
கூடுவோம் .

மதங்களை கடந்து .,
இனங்களை கடந்து .,
மக்கள் சேர்ந்தே ..,
வாழுவோம் .

நாட்டுக்குள் எத்தனை .,
பிரிவு .
அதை தகர்த்திட ..,
வேண்டும் துணிவு .

ஆண்டவன் முன்னே ..!
பணிவு .

வாழ்வில் வேண்டும் ..,
தெளிவு .

எழுதியவர் : சு.முத்து ராஜ குமார் (11-Sep-15, 5:39 pm)
பார்வை : 1691

மேலே