மங்கைக்குள் காதல் -கயல்விழி

நீரினை தொலைத்த மீன்களாய்
இரு இமைகளின் நடுவே துடித்துக்கொண்டிருந்தது கருவிழிகள் .

சிறைபிடிக்கப்பட்ட காற்றாய்
சிக்கித்தவித்துக்கொண்டிருந்தது
சுவாசம் .

சூரியனை தோற்கடித்து வெப்பத்தை கடனாய் வழங்கிக்கொண்டிருந்தது உடல் .

வானவில்லை பிடித்து வந்து
உடைக்காமல் உணவாக்கி
வர்ணம்தீட்டிகொண்டிருந்தது
கன்னங்கள் .

இடியின் சத்தத்தையும் மின்னலின் வேகத்தையும் மிஞ்சிவிட்டிருந்தது
இதயத்தின் லப்டப் ஒலி.

பாலைவனத்தின் வறட்சியை சிறிதாக்கி
வறண்டுகொண்டிருந்தது நாவு .

அலைகளின் ஆர்பரிப்பை தனக்குள்
அடக்கி
தவித்துக்கொண்டிருந்தது இதழ்கள் .

இவை எதுவும் அறியாது
தடம்புரண்ட ரயிலாய் தடுமாறிய மனதிற்கு
மௌனம் சொன்னது
மங்கைக்குள் காதல் ..!!!!

எழுதியவர் : கயல்விழி (13-Sep-15, 12:35 pm)
பார்வை : 420

மேலே