ம்ம்ம் இதுவும் உண்மையே

வெளிச்சம் தேடும் விட்டில்பூச்சிகள்
அறிவதில்லை
விளக்கு தன் உயிர்குடிக்கும் எமன் என்று .
கர்ப்பம் சுமக்கும் சிலந்திக்கு புரிவதில்லை
குழந்தைகள் கண்திறக்கும் போதே
உணவாய் சுவைப்பது
அதன் உடலை என்று.
முளைவிடும் அரும்புகள் நினைப்பதில்லை
மலர்தல் தான்
தன் மரணம் என்று.
மனிதன் உணர்வதே இல்லை
மரணம் தான் வாழ்வின்
முடிவுரை என்று ..!!!