ம்ம்ம் இதுவும் உண்மையே

வெளிச்சம் தேடும் விட்டில்பூச்சிகள்
அறிவதில்லை
விளக்கு தன் உயிர்குடிக்கும் எமன் என்று .

கர்ப்பம் சுமக்கும் சிலந்திக்கு புரிவதில்லை
குழந்தைகள் கண்திறக்கும் போதே
உணவாய் சுவைப்பது
அதன் உடலை என்று.

முளைவிடும் அரும்புகள் நினைப்பதில்லை
மலர்தல் தான்
தன் மரணம் என்று.

மனிதன் உணர்வதே இல்லை
மரணம் தான் வாழ்வின்
முடிவுரை என்று ..!!!

எழுதியவர் : கயல்விழி (15-Sep-15, 6:23 pm)
பார்வை : 301

மேலே