பசுமை

ஐந்து ரூபாய்க்கும்
கிடைக்காத..
அருகம்புல்லை
சொன்னவிலைக்கு
வாங்கிப்போகிறது மனது..
வயலும் வாய்க்காலும் அழிந்து
வணிகமயமாகிவிட்ட
நகரத்து தார்ச்சாலையில்
பசுமையை நினைத்தபடி.!

எழுதியவர் : நிலாகண்ணன் (17-Sep-15, 2:41 pm)
Tanglish : pasumai
பார்வை : 151

மேலே